கள்ளநோட்டு தயாரித்த தியாகியின் மகன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் காரில் வந்த ஒரு பெண் உள்பட 3 பேர் அங்குள்ள கடைகளில் 100 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கிவிட்டு, 500 ரூபாயை கொடுத்தனர். கடைக்காரர் நோட்டை பார்த்ததும் சந்தேகம். உடனே அவர்கள் மீதியை வாங்காமல் அங்கிருந்து நழுவினர். ஆனால் கடைக்காரர் மற்றும் சிலர் அவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று பிடித்தனர். பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர்கள் திருச்சியை சேர்ந்த அப்துல் சுக்கூர், அவர் மனைவி ஹசீனாபானு, கார் டிரைவர் சையது காசிம் என்பது தெரிய வந்தது. அவர்கள் தங்கள் வீட்டில் புதிய 2 ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ஒரு பிரின்டர்,
ரூபாய் நோட்டுகளின் நடுவில் ஒட்டப்படும் பேப்பர், கள்ளநோட்டுகளை தயாரிக்க பயன்படுத்தும் உபகரணங்கள் இருந்தன. மேலும், ஒரு பையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் இருந்தன. போலீசார் அதை பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.
அப்துல் சுக்கூரின் தந்தை சையதுமுகமது சுதந்திர போராட்ட தியாகி. பல ஆண்டுகளாக தனது மகனுடன் அவர் பேசுவதில்லை என்று கூறப்படுகிறது.
Loading More post
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
செம்மலை, ஜெயக்குமார்.., மாநிலங்களவை அதிமுக வேட்பாளர்கள் தேர்வில் தொடரும் இழுபறி!
2 வருடமாக அவதிப்பட்ட மகன்; தியாக ரூபத்தில் வந்த தாய் - ரோபோ உதவியுடன் மருத்துவர்கள் சாதனை
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்