மகாராஷ்ட்ர தேர்தலில், பிரபல தாதா, ‘சோட்டா ராஜன்’ தம்பிக்கு வழங்கப்பட்ட தொகுதியில் வேறு வேட்பாளர் போட்டியிடுவார் என்று இந்திய குடியரசு கட்சி அறிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் அக்டோபர் 21ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜக- சிவசேனா தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையிலான இந்திய குடியரசுக் கட்சியும் இடம்பெற்றுள்ளது. அந்தக் கட்சிக்கு 6 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதில் ஒரு தொகுதியை, பிரபல தாதா, ‘சோட்டா ராஜன்’ தம்பி தீபக் நிகல்ஜி-க்கு இந்திய குடியரசுக் கட்சி ஒதுக்கியது. அதன்படி, சதாரா மாவட்டத்தில் உள்ள பல்தான் (Phaltan) தொகுதியில் தீபக் நிகல்ஜி போட்டியிடுவார் என்று அறிவிக் கப்பட்டது. இவர் இதற்கு முன்னர் மும்பையின் செம்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
இந்நிலையில் பல்தான் தொகுதியில் தீபக் நிகல்ஜிக்கு பதிலாக திகம்பர் அகவானே போட்டியிடுவார் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்ட்ரா அமைச்சருமான அவினாஷ் மகடேகர் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு