கட்டுமானப் பணிகளை முடிக்காததால் எண்ணூர் அனல்மின் நிலையத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை தற்போதைக்கு வழங்க முடியாது என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள பழைமையான அனல்மின் நிலையங்களில் ஒன்றான எண்ணூர் அனல்மின் நிலையத்தின் ஆயுட்காலம் முடிந்ததால், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அங்கு மின்உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே இருக்கக்கூடிய நிலையத்திலேயே புதுப்பித்து புதிய அனல்மின் நிலையம் அமைக்க தமிழக அரசு கோரிக்கை வைத்திருந்தது. அதற்கு, அனல்மின் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகளில் 17 சதவிகிதம் வரைதான் பணி முடிந்திருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. அத்துடன் அனல்மின் நிலையம் பகுதியில் 33 சதவிகிதம் பசுமை அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அனல்மின் நிலையத்தை புதுப்பிப்பது தொடர்பாக அப்பகுதி மக்களிடம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கருத்து கேட்கவில்லை என்றும், கடல்நீர் பாதிப்பு குறித்து சரியான அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சுற்றுச்சூழல் மாசுபடாத அம்சங்கள் குறித்த தகவல்களை முழுமையாக தராததால், இந்த அனுமதியின் மீது எந்தவிதமான முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Loading More post
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வேலூர் சிறையில் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசியதாக வழக்கு: முருகன் விடுதலை
"பாலியல் வக்கிரம் என்பது சீமானின் ஒரு அங்கம்" - ஜோதிமணி எம்.பி மீண்டும் குற்றச்சாட்டு
சென்னை சுற்றுவட்டாரத்தில் கிளஸ்டராக உருவாகும் கொரோனா - சுகாதாரத்துறை செயலர் எச்சரிக்கை
டாஸ் முதல் டெத் ஓவர் வரை.. #GLvsRR இரண்டில் எது உண்மையில் பலமான அணி?
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!