நாட்டை மீட்க மன்மோகன் சிங்கால் மட்டுமே முடியும் என மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு நிதியை பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு உதவியதாக, கடந்த மாதம் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் அக்டோபர் 3ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து ப.சிதம்பரம் டெல்லியிலுள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி திகார் சிறையிலுள்ள ப.சிதம்பரத்தை கடந்த 23 ஆம் தேதி காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங் சந்தித்து பேசினர்.
I urge the Government to listen to the wisdom of Dr Manmohan Singh.
If anyone can show the way for the country to come out of the current economic slump, it is Dr Singh.— P. Chidambaram (@PChidambaram_IN) September 26, 2019
இந்நிலையில், மன்மோகன் சிங்கிற்கு இன்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் “பொருளாதார சரிவில் இருந்து நாட்டை மீட்க மன்மோகன் சிங்கின் ஆலோசனைகளை கேட்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். தற்போதைய பொருளாதார சரிவில் இருந்து நாட்டை வெளியே கொண்டு வர அவரால் மட்டுமே முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அமலாக்கத்துறை விசாரணை முடித்து பின்வழியாக வாடகை காரில் சென்ற இயக்குநர் சங்கர் - ஏன்?
ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்ந்தது சிலிண்டர் விலை... இம்முறை எவ்வளவு?
"மற்ற ஆறு பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள்" - நளினியின் வழக்கறிஞர் பேட்டி
“தம்பி பேரறிவாளன் வேலூர் சிறையிலிருந்தது என்னால்தான் வெளியே தெரிந்தது” - சீமான் பேச்சு
'முதலில் சுதந்திரக் காற்றை சுவாசித்து கொள்கிறேன்! மற்றதெல்லாம் அப்புறம்தான்!' - பேரறிவாளன்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்