கர்நாடகாவில் முந்தைய ஆட்சி கவிழக் காரணமான 15 அதிருப்தி முன்னாள் எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை விசாரணை நடத்தவுள்ளது.
கர்நாடகாவில் முந்தைய காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தள அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற 15 அதிருப்தி எம்எல்ஏக்களை அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்தார். அந்த இடங்களுக்கு அக்டோபர் 21-ஆம் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 30-ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில், பாரதிய ஜனதா ஆட்சி அமையக் காரணமாக இருந்த அந்த 15 பேரையும் இடைத்தேர்தலில் அதே தொகுதிகளில் நிறுத்த அக்கட்சி உறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது. தகுதி நீக்க உத்தரவில், அவர்கள் 4 ஆண்டுகளுக்கு போட்டியிட அப்போதைய சபாநாயகர் தடை விதித்திருந்தார். அந்த உத்தரவை எதிர்த்து 15 பேரும் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவர்களை வேட்பாளராக அறிவிப்பதில் பாரதிய ஜனதாவுக்கு சிக்கல் உள்ளது.
இந்நிலையில், அந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. அதில் தகுதி நீக்கம் செல்லாது என்று அறிவித்தாலோ, அல்லது இடைக்கால தடை விதித்தாலோ மட்டுமே அவர்கள் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதால், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையே, டெல்லி சென்ற கர்நாடக முதல்வர் எடியூரப்பா, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடியூரப்பா, இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!