வேலூரைச் சேர்ந்த மணமக்களுக்கு தபால் மூலம் பிரதமர் மோடி திருமண வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
வேலூர் வாலாஜாபேட்டையில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ ஆய்வாளர் டி.எஸ்.ராஜசேகரன். இவரது மகளின் திருமணம், நாளை மறுநாள் ராணிப்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமணத்தில் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜசேகரன் திருமண அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் தபால் வந்தது. அதில் பிரதமர் மோடி கையொப்பமிட்ட திருமண வாழ்த்து மடல் இருந்தது. அதில் ''என்னை திருமணத்துக்கு அழைத்தமைக்காக நன்றி. மணமக்களுக்கு வாழ்த்துகள்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரிடம் இருந்து வந்த வாழ்த்து செய்தி எதிர்பாரா மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மணமக்கள் மற்றும் திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!
'ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை' - ஆகாஷ் சோப்ரா
ஐஏஎஸ் அதிகாரிக்காக மைதானங்கள் காலி செய்யப்படுவதா? டெல்லி அரசு அதிரடி உத்தரவு
ஜிஎஸ்டி வரி உயர்வு முடிவை தள்ளிவைக்கும் மத்திய அரசு.. என்ன காரணம்? முழு விபரம்!
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!