வேலூரைச் சேர்ந்த மணமக்களுக்கு தபால் மூலம் பிரதமர் மோடி திருமண வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
வேலூர் வாலாஜாபேட்டையில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற வட்டார மருத்துவ ஆய்வாளர் டி.எஸ்.ராஜசேகரன். இவரது மகளின் திருமணம், நாளை மறுநாள் ராணிப்பேட்டையில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திருமணத்தில் நேரில் பங்கேற்று மணமக்களை வாழ்த்த வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு ராஜசேகரன் திருமண அழைப்பிதழை தபால் மூலம் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் தபால் வந்தது. அதில் பிரதமர் மோடி கையொப்பமிட்ட திருமண வாழ்த்து மடல் இருந்தது. அதில் ''என்னை திருமணத்துக்கு அழைத்தமைக்காக நன்றி. மணமக்களுக்கு வாழ்த்துகள்'' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமரிடம் இருந்து வந்த வாழ்த்து செய்தி எதிர்பாரா மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக மணமக்கள் மற்றும் திருமண வீட்டார் தெரிவித்துள்ளனர்.
Loading More post
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
கூட்டுறவு பசுமை பண்ணை கடைகள் மூலம் குறைந்த விலையில் தக்காளி: அமைச்சர் ஐ.பெரியசாமி
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!