தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டவர்களுக்கான தமிழக அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு தந்தை பெரியார் விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புலவர் பா.வீரமணிக்கு திருவள்ளுவர் விருதும், மருத்துவர் துரைசாமிக்கு அண்ணல் அம்பேத்கர் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன. கவிஞர் கூரம் மு.துரைக்கு பேரறிஞர் அண்ணா விருதும், பெருந்தலைவர் காமராசர் விருது நீலகண்டனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.பேராசிரியர் முனைவர் ச.கணபதிராமனுக்கு மகாகவி பாரதியார் விருதும், பாவேந்தர் பாரதிதாசன் விருது கவிஞர் பாரதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது பேராசிரியர் மறைமலை இலக்குவனாருக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது மீனாட்சி முருகரத்தினத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விருதுகளை வழங்குவார் என தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Loading More post
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்? - அமைச்சர் மனோ தங்கராஜ்
கோயில் திருவிழா பாதுகாப்பில் குளறுபடி? - தடுப்பு மீது ஏறிக்குதித்த எம்பி ஜோதிமணி!
ஓ.பன்னீர்செல்வத்திடம் சில நிமிடங்கள் தனியாக பேசிய பிரதமர் மோடி!
ரயில் வரவேற்பு விழா: தேனி ரயில் நிலையத்தில் விடிய விடிய பறந்த 'தேசியக் கொடி'!
சமபலத்துடன் பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் - இறுதிப் போட்டிக்கு செல்வது யார்? இன்று மோதல்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!