Published : 03,Sep 2019 12:15 PM
செய்தியாளர்கள் கேள்விக்கு 5 விரல்களை காட்டிய ப.சிதம்பரம்

சிபிஐ காவல் நீட்டிக்கப்படுவது குறித்து ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா என ப.சிதம்பரத்திடம் கேட்டபோது ஜிடிபி 5 சதவீதம் என பதில் அளித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிபிஐ கூறியபோதும், செப்டம்பர் 5-ஆம் தேதி வரை அவரை சிபிஐ காவலில் வைக்க உச்சநீதிமன்றம் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளது.
"5%...GDP is 5%": #PChidambaram reacts outside the #Delhi court when he is asked if he has to say anything after prolonged #CBI custody. pic.twitter.com/JQIHVUh29b
— Utkarsh Anand (@utkarsh_aanand) September 3, 2019
இந்நிலையில் சிபிஐ காவல் நீட்டிக்கப்படுவது குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என சிதம்பரத்திடம் டெல்லி நீதிமன்றம் வெளிய செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த சிதம்ரபம் ஐந்து விரல்களையும் காண்பித்து 5 சதவீதம் என்றார். என்ன ஐந்து சதவீதம் என்று மறுகேள்வி கேட்டதற்கு ஜிடிபி ஐந்து சதவீதம் என பதில் அளித்தார்.