இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ராகுல் டிராவிட் மாற்றப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட்டுக்கு தனி இடம் எப்போதும் உண்டு. இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்படும் டிராவிட், ஓய்வுப்பெற்ற பிறகு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் ஆனார். திறமைவாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு ஏற்றுமதி செய்யும் தார்மீக பொறுப்பை டிராவிட் சிறப்பாக செய்து வருகிறார். இந்தியா ஏ அணிக்கும் பயிற்சியாளராக இருந்து வருகிறார். தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக டிராவிட் நியமிக்கப்பட்டதை அடுத்து இரட்டை ஆதாயப் பதவி பிரச்னையில் சிக்கினார்.
இந்நிலையில், ராகுல் டிராவிட் இனி இந்தியா ஏ மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிகளுக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்பில் நீடிக்கமாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஐசிசி தகவலின்படி சிதான்ஷூ கோடக் மற்றும் பாரஸ் மாம்பரே ஆகியோர் முறையே இந்தியா ஏ மற்றும் யு19 அணிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவுள்ளனர். அடுத்த சில மாதங்களுக்கு மட்டுமே இவர்கள் அந்த பொறுப்பில் இருப்பார்கள் என கூறப்படுகிறது.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்