பொதுப்பாதையை ஆக்கிரமித்து நடிகர் சங்க கட்டடம் கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில் நடிகர் சங்க கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடம் 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
2017 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பிறகு மீண்டும் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 33 அடி பொது சாலை என மனுதாரர்கள் குறிப்பிடும் இடத்திற்கு தகுந்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனுதாரர்கள் தரப்பு தவறிவிட்டது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நடிகர் சங்க கட்டடமோ அல்லது இடமோ பொது சாலையை ஆக்கிரமிக்கவில்லை என உயர்நீதிமன்றம் உறுதி படுத்தியுள்ளது.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?