சென்னை மருத்துவக் கல்லூரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தகுதிக்கேற்ற ஊதியம், பட்டமேற்படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு உள்ளிட்டவை வழங்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசு மருத்துவர்களில் ஒரு பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்றுள்ளனர். இதனால் நோயாளிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டள்ளது.
இந்நிலையில் அரசு மருத்துவர்களின் ஸ்டிரைக் தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதிய தலைமுறையிடம் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், ஸ்டிரைக்கில் ஈடுபடுள்ள அரசு மருத்துவர்களுடன் முறையாக பேச்சு நடத்த அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார். மருத்துவம் என்பது சேவைத்துறை என்றும், அதில் மருத்துவர்கள் முக்கிய அங்கமாக உள்ளனர் எனவும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதனிடையே மருத்துவர்களின் வேலைநிறுத்தத்தால் கடலூர் மாவட்டம் விருத்தாசலம், சிதம்பரம் அரசு மருத்துவமனைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Loading More post
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
'உன்னை நீ நம்பினால்' - தினேஷ் கார்த்திக் உற்சாக ட்வீட்
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்