சிதம்பரத்தின் 5 நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடையும் நிலையில் மேலும் 5 நாட்கள் காவலை நீட்டிக்கக்கோரி சிபிஐ நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் கைதாகினார். அவருக்கு 5 நாள் சிபிஐ காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் சிதம்பரத்தின் காவலை மேலும் 5 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என சிபிஐ நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணை விவரத்தை அளிக்குமாறு சிபிஐ தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 4 நாட்களாக சிதம்பரத்திடம் என்ன விசாரணை நடத்தப்பட்டது எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சிபிஐ தரப்பு மின்னஞ்சல் பரிமாற்றங்கள், ஆவணங்கள் உள்ளிட்டவை ஆதாரங்களாக கிடைத்துள்ளதாகவும் அமலாக்கத்துறை விசாரணை சம்பந்தமாக சில ஆதாரங்களை தந்துள்ளன எனவும் தெரிவித்தது.
அதற்கு ஏதோ சில துண்டு சீட்டுகளை காட்டிவிட்டு ஆதாரங்கள் என்கிறார்கள். உண்மையான ஆதாரங்கள் இருந்தால் காட்டலாமே என ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில்சிபல் வாதாடி வருகிறார். மேலும் ஆதாரங்களை சிபிஐ நீதிமன்றத்தில் காண்பிக்க மறுப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிபிஐயின் மனு மீதான உத்தரவு 20 நிமிடங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?