கழிவறையை சுத்தம் செய்வது கேவலமான செயல் அல்ல என்றும்.. எந்த இடத்தில் பிரச்னை என்று சொல்லுங்கள்.. நானே வந்து சரிசெய்து தருகிறேன் என தருமபுரி எம்.பி செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
தருமபுரி எம்.பி செந்தில்குமார். ட்விட்டரில் ஆக்டிவாக செயல்படக் கூடியவர். இவர் சமீபத்தில் ட்விட்டரில் ஒரு பதிவிட்டிருந்தார். அதாவது மொரப்பூர் அரசு மருத்துவமனை செல்லும் வழியில் தெரு விளக்கு பிரச்னை தொடர்பாக புகார் வந்ததாகவும், அதனைத்தொடர்ந்து அது சரிசெய்து கொடுக்கப்பட்டதகாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கான பின்னூட்டத்தில் பழனி என்பவர், ‘பாத்ரூம் அடைச்சிருக்கு. வந்து சுத்தம் செய்து தருகிறீர்களா’ என பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த செந்தில்குமார், “இதில் என்ன இருக்கு... எங்கே என்று சொல்லுங்கள்., நானே நேரில் வந்து சரி செய்து தருகிறேன். இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல. புனிதமான செயல் தான்.” எனப் பதில் அளித்துள்ளார்.
இதனிடையே பழனி என்பவர் வம்பு இழக்கும் வகையிலேயே அந்தக் கேள்வியை எழுப்பியிருப்பது போன்று உள்ளது, எனக் கூறும் ட்விட்டர்வாசிகள், எம்.பி செந்தில்குமார் நிதானமாக பதில் அளித்திருப்பது அவரின் பெருந்தன்மையை காட்டுவதாக புகழ்ந்துள்ளனர்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?