புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வாழைக்குறிச்சியில் பெண்ணை கொலை செய்து கண்மாயில் புதைத்தவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். 100 நாள் வேலைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற பாண்டிச்செல்வியை காணவில்லை என அவரது தந்தை பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
டி.எஸ்.பி. தமிழ்மாறன் தலைமையிலான காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டிச்செல்வியை தேடி வந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பாண்டிச்செல்வியின் கணவருக்கு வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் ஒன்று வந்தது. அதில் பேசியவர் தனது பெயர் ரெங்கையா என்றும், பாண்டிச்செல்வியை தான் கொலை செய்துவிட்டதாகவும், அதற்காக தம்மை மன்னித்துவிடும்படியும் கூறியிருந்தார்.
அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாண்டிச்செல்வியின் கணவர் தனது மாமனார் மூலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ரெங்கையாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். தமக்கும் பாண்டிச்செல்விக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகக் கூறிய ரெங்கையா கொலைக்கான காரணத்தையும் காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து ரெங்கையாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் வாழைக்குறிச்சி கண்மாயில் புதைக்கப்பட்டிருந்த பாண்டிச்செல்வியின் உடல் வட்டாட்சியர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டு கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
Loading More post
'மதரஸா' என்ற வார்த்தையே இருக்கக் கூடாது - முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா
சென்னை: பைக்கில் பின்னால் அமர்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் அபராதம்
`இங்க இருக்க பயமாருக்கு ப்பா’- கேரள விஸ்மயாவின் கடைசி வார்த்தைகள்; வழக்கில் இன்று தீர்ப்பு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
பழங்குடியின பள்ளி மாணவி மீது இளைஞர் சரமாரி தாக்குதல் - முதல்வர் அதிரடி உத்தரவு
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்