ஜம்முவில் தாவி ஆற்றின் நடுவே வெள்ளப்பெருக்கில் சிக்கிய இருவர் ராணுவ ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
ஜம்மு-காஷ்மீரில் கனமழை பெய்து வருவதால் ஜம்மு அருகே பாய்ந்தோடும் தாவி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் குறுக்கே கட்டுமானப் பணி நடைபெற்று வரும் இடத்தில் மீனவர்கள் 4 பேர் சிக்கினர். இதில் 2 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இருவர் கரைக்கு செல்லமுடியாமல் அங்கிருந்த தடுப்புசுவரின் மீது ஏறி நின்று காப்பாற்றுமாறு கூக்குரல் எழுப்பினர். இதனையறிந்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்பு படையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். எனினும் அவை தோல்வியில் முடிந்ததால் ராணுவ ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டது.
ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலம் ராணுவ வீரர் கிழே இறங்கி, இவருவருக்கும் கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். ஆற்றின் நடுவே சிக்கியவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் காட்சி மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சுமார் 30 நிமிடங்கள் நடந்த இந்தப் போராட்டத்தில் இருவரையும் மீட்ட ராணுவத்தினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதற்கிடையில் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மற்ற இருவரை வேறு இடத்தில் காவல்துறையினர் மீட்டனர்
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'