தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன், டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்துள்ளார். இம்மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுப்பதற்கு அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேரம் பேசியதாக புகார்கள் எழுந்தன. டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் 16 ஆம் தேதி போலீசாரிடம் பிடிபட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் மூலம் இந்த தகவல் வெளியானது. சுகேசிடம் இருந்து 1.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. அவன் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் யார் - யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற தகவலைக் கூறினார். இதையடுத்து கடந்த மாதம் 25 ஆம் தேதி அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்காக அவரும், சுகேஷும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கில் டிடிவி தினகரன் சார்பாக ஜாமீன் கேட்டு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
Loading More post
பத்திரிகையாளர்களிடம் அநாகரிகமாக நடந்து கொள்வதா? அண்ணாமலைக்கு வலுக்கும் கண்டனம்
திருப்பதி கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - 4 கிமீ தூரம் நீளும் வரிசை
இன்று திறக்கப்படுகிறது முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் முழு உருவச் சிலை
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!