புறப்படும் நேரத்தில் விமானத்தில் இருந்த தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டுபிடித்ததால், அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த நிதின் கட்கரி உட்பட பயணிகள் பத்திரமாக இறக்கப்பட்டனர்.
மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் இருந்து டெல்லிக்கு 6E 636 என்ற எண் கொண்ட இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. இந்த விமானத்தில் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி உள்பட ஏராளமான பயணிகள் இருந்தனர். விமான ம் புறப்படுவதற்காக ரன்-வேக்கு சென்றது. பறப்பதற்குத் தயாராக இருந்தபோது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப் பதைக் கண்டார் விமானி.
உடனடியாக இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த அவர், விமானத்தை ரன்வேயில் இருந்து விமானங்களை நிறுத்துமிடத்துக்கு மீண்டும் கொண்டு வந்தார். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
விமானத்தில் இருந்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உட்பட அனைத்துப் பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். சரியான நேரத்தில் விமானத்தின் தொழில்நுட்ப கோளாறை விமானி கண்டறிந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'