மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அரசியல் நாகரீகமற்றவர் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
காஷ்மீர் விஷயத்தில் முதல் துரோகம் செய்தது காங்கிரஸ் கட்சிதான் என வைகோ நாடாளுமன்றத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கே.எஸ்.அழகிரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘காங்கிரஸ் என்ன துரோகம் செய்தது என்று கூறினால் நாங்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். காஷ்மீர் மாநிலத்தில் சுயாட்சியை பறிக்கிற பாஜகவின் சதி திட்டத்திற்கு வைகோ துணை போகலாமா?. வைகோவின் பாரதிய ஜனதாவா, காங்கிரஸ் கட்சியா?. காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு, காங்கிரஸையே வைகோ விமர்சிப்பது அரசியல் நாகரீகமற்றது. அரசியலில் சந்தர்ப்பவாதம் கொண்ட ஒரு பச்சோந்தி வைகோ. நரேந்திர மோடி, சுப்ரமணியன் சுவாமியை சந்தித்த வைகோ மன்மோகன் சிங்கையும் சந்தித்துள்ளார்.
உலகின் அழகிய நிலப்பரப்பை இந்தியாவோடு நேரு சேர்த்ததை வைகோ துரோகம் என்கிறாரா? 2016இல் ஜெயலலிதாவை வீழ்த்த திமுக வலிமையான கூட்டணி அமைத்தபோது, அதற்கு எதிராக சதி செய்தவர் வைகோ. வைகோவின் அரசியல் பாதையை உற்று கவனிப்பவர்கள் அவர் யாருக்குமே விசுவாசமாக இல்லை என்பதை அறிவர்” எனத் தெரிவித்துள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்