நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவில் இன்றும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் கடந்த 3 நாட்களாக நீலகிரியின் நான்கு தாலுக்காக்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த உத்தரவை மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தெரிவித்திருந்தார். அதன்படி, கூடலூர், பந்தலூர், குந்தா, ஊட்டி ஆகிய தாலுகாகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படவில்லை.
இந்நிலையில், கனமழை தொடர்வதால் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர், பந்தலூர், குந்தா தாலுக்காவிற்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். நீலகிரி அவலாஞ்சியில் ஒரே நாளில் 82 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பவானிசாகர் தெங்குமரஹாடா கிராமத்துக்கு இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மாயாற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 23 ஆயிரத்து 261 கனஅடியாக அதிகரித்துள்ளது. மக்கள் படகு மூலம் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டாம் எனவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Loading More post
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
வடிகால்களை தூர்வாராமல் டெல்லியை மூழ்கடிக்க பாஜக விரும்புகிறதா? - ஆம் ஆத்மி
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை