நாகை மாவட்டத்தில், கஜா புயலின்போது வேரோடு மண்ணில் சாய்ந்த பழமையான ஆலமரத்தை, கிராம மக்கள் மீண்டும் நட்டு வைத்து உயிர்ப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டது. இதில், வேதாரண்யம் அருகே மறைஞாயநல்லூர் - உச்சக்கட்டளையில் இருந்த இருநூறு ஆண்டுகள் பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. திரௌபதி அம்மன் கோயிலில் இருந்த அந்த மரம் கிராமத்தின் அடையாளமாகவே இருந்தது.
பழமையான இந்த மரத்தை மீட்டெடுக்க முடிவு செய்த கிராம மக்கள், சொந்த செலவில் இரண்டு கிரேன்கள், ஒரு பொக்லைன் மூலம் ஆலமரத்தை நடும் பணிகளில் ஈடுபட்டனர். 12 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு, ஆலமரம் நிமிர்த்தப்பட்டு, மண்ணில் நட்டு வைக்கப்பட்டது. ஆலமரத்தை உயிர்ப்பிக்க, அவர்கள் 50 ஆயிரம் ரூபாயை செலவு செய்துள்ளனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!