
பிரதமர் நரேந்திர மோடியை, கர்நாடக மாநில முதலமைச்சர் எடியூரப்பா இன்று சந்தித்து பேசினார். நாடாளுமன்ற வளாகத்தில், நிகழ்ந்த இந்தச் சந்திப்பில் மேகதாது அணை சம்பந்தமாக விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என எடியூரப்பா கோரிக்கை விடுத்தார்.
கர்நாடகாவின் முதலமைச்சராக பதவியேற்ற பின், முதன்முறையான எடியூரப்பா டெல்லி சென்றுள்ளார். பிரதமரை சந்தித்துள்ள அவர், இன்று மாலை 7 மணியளவில் கர்நாடக எம்.பிக்கள் அனைவரையும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சந்தித்து பேசவுள்ளார். மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் ராஜேந்திர சிங் செகாவத்தையும் சந்திக்க எடியூரப்பா திட்டமிட்டுள்ளார்.