விளையாட்டுக்காக சக நண்பர்கள் வயிற்றுக்குள் காற்று நிரப்பியதால் 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.
மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் நேற்று விடுமுறை தினம் என்பதால் விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது காற்று பம்பு மூலம் வயிற்றுக்குள் காற்று நிரப்பி விளையாடியுள்ளனர். இதனால் வயிற்றில் காற்று நிரம்பியதால் மூச்சுத்திணறி 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.
விபத்து குறித்து தகவல் தெரிவித்த அப்பகுதி காவல்துறை, உயிரிழந்த சிறுவனின் தந்தை தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருக்கும் போது பம்பு மூலம் வயிற்றுக்குள் காற்றை நிரப்பியுள்ளனர். இதனால் காற்று நிரம்பி மூச்சுத்திணறிய சிறுவன் உயிரிழந்துள்ளான் என்று தெரிவித்தார்.
விபத்து குறித்து கருத்து தெரிவித்த உயிரிழந்த சிறுவனின் தந்தை, நான் தூங்கிக் கொண்டு இருந்தேன். அப்போது என் மகனை இரண்டு சிறுவர்கள் விளையாடுவதற்காக அழைத்துச் சென்றனர். திரும்பி வரும்போது மகனின் வயிறு வீங்கி இருந்தது. உடனடியாக அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அதற்குள் அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் எனத் தெரிவித்தார்.
உடற்கூராய்வு முடிவு வெளிவந்த பிறகே சிறுவனின் உயிரிழப்புக்கான முழு காரணம் தெரியவரும் போலீசார் தெரிவித்துள்ளனர்
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி