அத்திவரதரை இன்று தரிசிக்கிறார் முதல்வர் பழனிசாமி

அத்திவரதரை இன்று தரிசிக்கிறார் முதல்வர் பழனிசாமி
அத்திவரதரை இன்று தரிசிக்கிறார் முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரத்தில் இன்று அத்திவரதரை தரிசனம் செய்கிறார். 

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், அத்திவரதர் வைபவம் 23ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. தினமும் ஏராள மான பக்தர்கள் அவரை தரிசனம் செய்து செல்கின்றனர். கூட்ட நெரிசல் அதிகமாக இருப்பதாக அதை சமாளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமி, இன்று பிற்பகல் 2 மணி அளவில் காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசனம் செய்கி றார். பின்னர் பக்தர்களின் வசதிக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அங்கு அவர் ஆய்வு செய்வார் என்று கூறப் படுகிறது. அவர் வருகையை ஒட்டி, 4 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com