அத்தி வரதரை காண திருப்பதியை விட அதிகக் கூட்டம் வருவதால் மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலின் குளத்தில் இருந்து 40 வருடங்களுக்குப் பின்னர் அத்தி வரதர் வெளியே எடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து 48 நாட்கள் அத்தி வரதரை தரிசிக்கலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்ததால், லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்து வருகின்றனர். இந்திய குடியரசுத் தலைவர் உட்பட ஏராளமான பிரபலங்களும் அத்தி வரதரை தரிசித்துவிட்டு சென்றுள்ளனர்.
இதனால் நாளுக்கு நாள் அங்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எதிர்பார்த்ததைவிட மக்கள் அதிகமாக அத்தி வரதரை தரிசிக்க வருவதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் பக்தர்களுக்கு பிஸ்கட் மற்றும் சர்க்கரை கரைசலும் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் மக்களின் கூட்டத்தால் இதுநாள் இருந்த வரதராஜ பெருமாள் கோயிலின் வருவாய் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இந்நிலையில் 40 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியே எடுக்கப்பட்டுள்ள அத்தி வரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் தெரிவித்துள்ளார். அத்தி வரதரை லட்சக்கணக்கோர் காண வருவதாகவும், திருப்பதியை விட புகழ் வாய்ந்த இடமாக அத்தி வரதர் வைபவம் உள்ளதாகவும், அதனால் தான் மக்கள் அதிகமாக வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், “கடந்த காலங்களில் திருட்டு பயம் காரணமாக அத்திவரதரை பூமிக்கடியில் புதைத்தோம், தற்போது அது தேவையில்லை. இதுதொடர்பாக முதல்வரை சந்தித்து அனைத்து மடாதிபதிகளும் கோரிக்கை விடுக்கவுள்ளோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
ராக்கெட்டுகளை ஏவுவதற்கு குலசேகரப்பட்டினத்தை தேர்வு செய்தது ஏன்?-இஸ்ரோ விஞ்ஞானி புதிய தகவல்
’குழந்தைகள் மார்க் விஷயத்தில் பெற்றோர்கள் இதை மட்டும் செய்யாதீங்க’- அமைச்சர் அன்பில் மகேஷ்
காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை! - நீதிமன்றம்
தேசிய போலீஸ் அகாடமியின் இயக்குனராக தமிழகத்தைச் சேர்ந்த காவல் அதிகாரி ராஜன் நியமனம்!
கணவர் மரணம் குறித்து தவறான தகவலை பரப்பாதீங்க! - நடிகை மீனா வேண்டுகோள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்