ஈரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்கக் கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரித்துள்ளார். ஆனால், அப்படி எந்த தகவலும் வரவில்லை என்று ஈரான் அமைச்சர் மறுத்துள்ளார்.
ஹார்முஸ் (Hormuz) ஜலசந்தியில் நிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க கடற்படை கப்பலுக்கு அருகே, அச்சுறுத்தும் வகையில் ஈரானின் ஆளில்லா விமானம் பறந்து வந்தது என்றும் அதனால் அமெரிக்கக் கடற்படை மேற்கொண்ட தற்காப்பு நடவடிக்கையில் அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தங்கள் வீரர்களையும் அவர்களின் நலன்களை பாதுகாக்கும் உரிமையை அமெரிக்கா கொண்டிருக்கிறது என்று கூறியுள்ள டிரம்ப், சர்வதேச கடல் பகுதியில் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும் சர்வதேச வர்த்தகத்துக்கு இடையூறாகவும் செயல் பட்டு வரும் ஈரானுக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், தங்கள் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வரவில்லை என்று ஈரான் வெளியுற வுத் துறை அமைச்சர் ஜரீஃப் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை, ஈரான் சுட்டு வீழ்த்தி இருந்தது.
Loading More post
ஞானவாபி மசூதி வழக்கு - வாரணாசி நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு
'திமுகவினர் கெடுவைத்தால் அண்ணாமலை கூட்டத்தில் பேச ஆள் இருக்கமாட்டார்கள்' -சுப.வீரபாண்டியன்
உலகிலேயே அதிக விலைக்கு பெட்ரோல் விற்கும் நாடு எது?
குரங்கு அம்மை அறிகுறியா? நிச்சயம் இதனை செய்யுங்கள் - சுகாதாரத்துறை செயலாளர் அதிரடி உத்தரவு
முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ்.. அதிக முறை கடைசி இடத்தை பிடித்த அணி எது?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்