கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கை உள்ளதால், அதுபற்றியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆனது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி, நீண்ட நாட்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டை தனி மாவட்டமாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தென்காசி, செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். இரண்டு மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
தென்காசி, செங்கல்பட்டு போலவே கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டுமென்றும் நீண்டகாலமாக அம்மாவட்ட மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கை உள்ளதால், அதுபற்றியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி