Published : 16,Jul 2019 06:35 AM

கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு - முதல்வர் 

TN-CM-Palanisamy-announces-hike-in-wages-to-weavers

கைத்தறி நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கைத்தறி நெசவாளர்களுக்கு ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ஊதிய உயர்வை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-னின் கீழ்  நெசவாளர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வை முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

அத்துடன் இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தில் நெசவு செய்பவர்களுக்கு கூலி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதன்படி நெசவு தொழிலாளர்களுக்கான கூலி ஒரு சேலைக்கு 43 ரூபாய் ஆகவும், வேட்டிக்கு 24 ரூபாய் ஆகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்