அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில், டெல்லியில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
அன்சருல்லா என்ற பயங்கரவாத அமைப்பை தமிழகத்தில் உருவாக்க முயன்றதாக தமிழகத்தில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை மற்றும் நாகையில் 4 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் இந்த இருவரும் கைதாகினர். அவர்கள் இருவரையும் ஜூலை 25-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகாரில், டெல்லியில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். நாகை, சென்னையில் நடந்த சோதனை அடிப்படையில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 14 பேரையும் விமானம் மூலம் சென்னை அழைத்து வர என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அவர்களை பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
Loading More post
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
தகுந்த காரணமின்றி ரயிலில் அலாரம் செயினை இழுக்கக்கூடாது - ரயில்வே போலீசார்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!