மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக அம்மாநில பாஜக மூத்த தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றிப் பெற்றது. அத்துடன் பாஜக தனது வாக்கு வங்கியையும் அம்மாநிலத்தில் அதிகரித்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரண்டு எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர். அதன்பிறகு கடந்த மாதம் 28ஆம் தேதி முகுல் ராயின் மகன் மற்றும் 60 கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் இணைந்தனர்.
இந்நிலையில் இன்னும் 107 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணையவுள்ளதாக பாஜகவின் மூத்த தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 107 எம்.எல்.ஏக்கள் விரைவில் எங்கள் கட்சியில் இணைகிறார்கள். அவர்களின் பட்டியலை நாங்கள் தயாரித்து வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முகுல் ராய் 2017ஆம் ஆண்டு திரிணாமுல் கட்சியிலிருந்து வெளியேறினார். அதன்பின்னர் அவர் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!