சென்னையில் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை !

சென்னையில் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை !
சென்னையில் உதவி காவல் ஆய்வாளர் தற்கொலை !

சென்னை வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த உதவி ஆய்வாளர் சேகர் கத்தியால் கழுத்தை அறுத்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சேகர். இவருக்கு அ‌ண்மையில் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்தது. இதனையடுத்து சேகர் உதவி ஆய்வாளருக்கான பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையி‌ல் கடந்த 4 நாட்களா‌க சேகர் பயிற்சிக்கு செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. காவலர் குடியிருப்பில் தங்கியிருந்த சேகர் நேற்று மதுபோதையில் கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற வடபழனி காவல்துறையினர், சேகரின் உடலை மீட்டு கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குடும்ப பிரச்னை காரணமாக சேகர் தற்கொலை செய்து கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com