பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட குல்பூஷன் ஜாதவ் வழக்கு குறித்து சர்வதேச நீதிமன்றம் திங்கட்கிழமை விசாரணை நடத்தவுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எழுப்பியுள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச நீதிமன்றத்திடமிருந்து அதிகாரப்பூரவ தகவல் கிடைத்துள்ளதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளார் கோபல் பேக்ளே தெரிவித்தார். முன்னதாக ஜாதவிற்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா முறையிட்டிருந்தது. இதையேற்று ஜாதவின் மரண தண்டனைக்கு சர்வதேச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இந்திய கடற்படையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஈரானில் தொழிலில் ஈடுபட்டிருந்த ஜாதவ் அங்கிருந்து கடத்தப்பட்டதாக இந்தியா கூறியிருந்தது. ஆனால் அவர் பலூசிஸ்தானில் மார்ச் 5ம் தேதி கைது செயப்பட்டதாக பாகிஸ்தான் கூறுவதாகவும் இந்தியா வாதிட்டிருந்தது. பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்