கனமழை காரணமாக மும்பை நகரம் முடங்கிப் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இதன் காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கி நின்றது. குறிப்பாக சியோன் சர்க்கிள், காந்தி மார்க்கெட் பகுதிகளில் தேங்கிய மழை நீர், குளம் போல காட்சியளித்தது.
இதனால், வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும், சில இடங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. ரயில்கள் இயக்குவதில் தடைகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே பொதுமக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்காக வெளியே செல்வதற்குகூட முடியாத நிலை உருவாகியுள்ளது. அவசரகால தேவைக்காக ரயில்வே நிர்வாகம் சில தொலைப்பேசி எண்களை வெளியிட்டுள்ளது.
இதேபோல பால்கர் மாவட்டத்தில் பெய்த கனமழையால், ரயில் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால், ரயில்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக மேற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix