மதிய உணவு திட்டத்தில் காலை உணவு கொண்டுவரும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மதிய உணவு திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தில் காலை உணவு விரைவில் சேர்க்கப்படவுள்ளது என்று சில தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது தொடர்பாக மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு விளக்கமளித்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க், “தற்போது மதிய உணவு திட்டத்தின் கீழ் காலை உணவு வழங்கும் எண்ணம் எதுவும் இல்லை. தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் 2013-ன்படி 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. சில மாநிலங்களில் அந்த மாநிலங்களின் முயற்சியால் மதிய உணவுடன் சேர்த்து பால், மூட்டை மற்றும் பழங்கள் வழங்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் கடந்த 2018-19ஆம் ஆண்டு சராசரியாக 11.34 லட்சம் பள்ளிகளில் பயிலும் 9.17 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Loading More post
ஓபிஎஸ் வாகனத்தில் இருந்த ஈபிஎஸ் போட்டோவை கிழித்து செருப்பால் அடித்த ஆதரவாளர்கள்!
சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் மனைவிகளிடம் பேசி சமாதானப்படுத்த உத்தவ் மனைவி முயற்சி!
‘அம்மாவின் இதயத்தில் இருந்து... என் எதிர்காலத்தை...’ - ஓ.பி.எஸ். உருக்கமான பேச்சு
வலுவான மும்பையை வீழ்த்தி மாஸ் காட்டிய ம.பி அணி.. முதல்முறையாக வசமானது ரஞ்சிக் கோப்பை!
அட்லியுடனான கெமிஸ்ட்ரி.. ஜவான் சீக்ரெட்களை உடைத்த ஷாருக் கான்!
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'