இந்தியாவின் தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா இன்று ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 18 (23) ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ஆனால் முதலில் அவர் அவுட் இல்லை என்று மெயின் அம்பயர் கூறிவிட்டார். ஏனென்றால் பந்து பேட்டில் படாமல் சென்றதுபோல இருந்தது.
அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி ரிவிவ் (மறுபார்வை) ஆப்ஷனை பயன்படுத்தினர். அதை பார்த்த பின்னர் ரோகித் ஷர்மா அவுட் என மூன்றாவது அம்பயர் அறிவித்தார். இருப்பினும் அந்தப் பந்து உண்மையில் ரோகித் ஷர்மாவின் பேட்டில் பட்டதா ? என்ற கேள்வியை ரசிகர்கள் தற்போது எழுப்பி வருகின்றனர்.
ஏனென்றால் அந்தப் பந்து பேட்டில் படாமல், ரோகித் ஷர்மா காலில் கட்டியிருந்த பேடில் பட்டு சென்றது போல இருக்கிறது. அந்தப் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள், மூன்றாவது அம்பயரை விமர்சித்து வருகின்றனர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!