கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை சேமிப்பதால், எவ்வித பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற கூட்டத் தொடரில், கூடங்குளம் அணுக்கழிவு தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கேள்வி எழுப்பினார். அதற்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை அமைப்பு 2013-ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஒன்றாவது மற்றும் இரண்டாவது அணு உலை கழிவுகளால் அப்பகுதியில் எவ்வித பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டு உள்ளது. கூடங்குளம் அணு உலையால் அப்பகுதியில் ஏற்படும் கதிர்வீச்சின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள ஜிதேந்திர சிங், கூடங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது வரை அணுக்கதிர் வீச்சு குறிப்பிட்ட அளவிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்