மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஜூன் மாதத்திற்கான ஊதியம் தாமதம் ஆகும் என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை நிதியமைச்சகம் மறுத்துள்ளது.
நிதிப்பாற்றாகுறை காரணமாக மத்திய அரசில் குருப் ஏ மற்றும் பி பிரிவில் உள்ள ஊழியர்களுக்கு ஜூன் மாத சம்பளம் தாமதமாக வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை நிதியமைச்சகம் மறுத்துள்ளது. இது குறித்து அந்த நிதியமைச்சகம் விரிவான விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த் துறையுடன் தொடர்புள்ள ஒரு பிரிவு ஊழியர்களுக்கு மட்டும் ஊதிய தாமதம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் நிதி ஒதுக்கீடு வரம்புக்குள் செலவினங்களை கட்டுக்குள் வைப்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியானது என்றும் இது தற்காலிகமான ஒன்றே என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்திற்குள் பரிமாறப்படும் இந்த சுற்றறிக்கை ரகசியமானது என்றும் இதை பொது வெளியில் பகிர்பவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியமைச்சகம் எச்சரித்துள்ளது. முன்னதாக மத்திய அரசின் 'ஏ' மற்றும் 'பி' பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாதத்திற்கான ஊதியம் தாமதம் ஆகும் என்று வெளியான தகவலுக்கு தொழிற் சங்கங்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில் அரசின் விளக்கம் வெளியாகியுள்ளது.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!