மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம்

மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம்
மழை வேண்டி கோயில்களில் சிறப்பு யாகம்

மழை வேண்டி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கோயில்களில் யாகங்கள் நடைபெற்றன.

மழை வே‌ண்டி சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஷ்வரர் கோயிலில் வீணை கச்சேரியும் செய்தும், மந்திரங்கள் ஓதியும் பிரார்த்தனை செய்யப்பட்டது. அர்ச்சகர்கள் தண்ணீரில் நின்று தேவாரம் பாடினர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பச்சமலையில் உள்ள சுப்பிரமணியர் கோயிலில் மழைவேண்டி யாகம் நடத்தப்பட்டது. பூர்ண கும்ப கலசங்கள் வைத்து நடத்தப்பட்ட யாகவேள்வியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டார்.

கோவை மாவட்டம் பேரூரில் உள்ள பட்டீஸ்வரர் கோயிலில் வருண யாகம் நடத்தப்பட்டது. இதில், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலு‌மணி மற்றும் அதிமுக நிர்வாகிகளும் பங்கேற்று மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

மழை வேண்டி அதிமுக சார்பில் கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் பங்கேற்றனர். அப்போது மழை வேண்டி சிவாச்சாரியாகள் சிறப்பு வருண ஹோமம் செய்தனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com