மேற்கு வங்கத்தை சேர்ந்த அமைச்சர்கள் பதவியேற்கும் போது நாடாளுமன்றத்தில் பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்டனர்.
17ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தில் புதிய எம்பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் விரேந்திர குமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அந்தவகையில் மேற்குவங்கத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களான பாபுல் சுப்ரியோ மற்றும் தேபஸ்ரீ சௌதிரி பதவியேற்றனர். அப்போது பாஜகவினர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்தை எழுப்பினர்.
இது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை தாக்கும் விதமாக அமைந்தது. ஏனென்றால் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி மம்தா பானர்ஜியின் கார் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் செல்லும் போது சிலர் ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கமிட்டனர். இதனையடுத்து 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து பாஜகவினர் மம்தா பானர்ஜிக்கு ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று எழுதப்பட்ட கடிதங்களை அனுப்பி வைத்தனர்.
இதற்கு மம்தா பானர்ஜியின் கட்சியினர் பதில் கடிதமாக ‘ஜெய்ஹிந்த், ஜெய் பங்கலா’ என்ற வாசகத்துடன் அனுப்பிவந்தனர். இந்த விவகாரம் பாஜக மற்றும் திரிணாமுல் கட்சிகளுக்கு இடையில் பெரும் மோதலை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் பாஜகவினர் நாடாளுமன்றத்தில் மீண்டும் ஜெய் ஸ்ரீராம் விவகாரத்தை நினைவு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இம்முறை மேற்கு வங்கத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக 18 இடங்களில் வெற்றிப்பெற்றுள்ளது. இது கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக பெற்ற 2 இடங்களைவிட மிகவும் அதிகமான இடங்களாகும்.
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!