டெல்லியில் அரசு பள்ளி அருகே நின்ற லாரியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால், 300 க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை டெல்லி முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
தெற்கு டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள பெண்கள் அரசு பள்ளியின் அருகே இருந்த கண்டெய்னர் லாரியில் இருந்து திடீரென எரிவாயு கசிந்ததால் பள்ளியில் மாணவிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து 300க்கும் மேற்பட்ட மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் நேரில் சென்று மாணவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்