பள்ளி அருகே நின்ற லாரியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால், சுமார் 100 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். டெல்லியில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு டெல்லியில் உள்ள துக்ளகாபாத் பகுதியில் ராணி ஜான்சி பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து திடீரென எரிவாயு கசிந்ததால் பள்ளியில் இருந்த மாணவ, மாணவிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியரிடம் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து, பள்ளியிலிருந்து மாணவர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து வாயுக்கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!