வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி தொடர்ந்து 3ஆவது முறையாக 0.25% குறைக்கப்பட்டுள்ளது.
மும்பையில் நடைபெற்று வந்த ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை ஆய்வுக் கூட்ட முடிவில் வட்டிக்குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்போது வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதமான ரெப்போ 6 சதவிகிதமாக உள்ள நிலையில் அது 5.75 சதவிகிதமாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் பணவீக்கம் 3லிருந்து 3.1 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டியை வங்கிகள் குறைக்க வாய்ப்புள்ளது. 6 மாதங்களில் 3 முறையாக முக்கால் சதவிகிதம் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயனை வாடிக்கையாளர்கள் பெறும் வகையில் வங்கிகள் குறைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.
சக்திகாந்ததாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராகப் பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற 3 நிதிக்கொள்கை கூட்டங்களிலும் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
Loading More post
காஷ்மீர்: தொலைக்காட்சி நடிகையை கொன்ற 2 தீவிரவாதிகள் 24 மணிநேரத்தில் சுட்டுக்கொலை
“நாடாளுமன்ற நடவடிக்கையில் சிபிஐ தலையிடுகிறது” - சபாநாயகருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
பறிமுதல் செய்ய வந்த அதிகாரிகள்.. நகர மறுத்து அடம்பிடித்த ரூபாலி யானை.. நெகிழ்ச்சி சம்பவம்
டிஎன்பிஎஸ்சி கட்டாயத் தமிழ் தேர்வு - மாற்றுத் திறனாளிகளுக்கு விலக்கு
’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!