மக்களைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில் வன்முறை ஏற்பட்டால் தடுக்க நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பாக மாநில உள்துறை செயலாளர்கள், டிஜிபிக்களுக்கு அறிவுரை வழங்கியிருந்தது. வாக்கு எண்ணிக்கையால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மேலும், அந்தந்த மாநிலங்களில் பொது அமைதியை பாதுகாக்க அத்தனை நடவடிக்கையையும் எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறை நிகழாத வண்ணம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இதனால் இன்று இந்தியா முழுவதும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பதட்டமான தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் துணை ராணுவப்படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள மாநிலங்களின் அனைத்து தலைநகரங்கள், பொது இடங்கள், மக்கள் கூடும் இடங்கள், கட்சி அலுவலங்கள் ஆகிய இடங்களில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்குகள் எண்ணப்படும் மையங்களிலும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் 3 வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Loading More post
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
கருணாநிதி சிலை இருக்கும் வரை வெங்கையா நாயுடுவின் பெயர் வரலாற்றில் இருக்கும் - துரைமுருகன்
’அக்கினி நெஞ்சில் குமுறும் எரிமலை’..கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஒலித்த கேஜிஎஃப் பாடல்!
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?