தமிழகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்திலுள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் முதல் வாரத்தில் கோடை விடுமுறை விடப்பட்டன. விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளி கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பாடநூல்கள் உள்ளிட்ட பொருட்கள் அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடைந்துவிட்டதா என்பது குறித்து 31ஆம் தேதி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறக்கப்படும் ஜூன் 3ஆம் தேதி அன்றே அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா பாடநூல்கள், நோட்டுப்புத்தகம் மற்றும் இதர விலையில்லா பொருட்களை வழங்க வேண்டும் என அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாடநூல்கள் தங்களின் தேவைப்பட்டியலின்படி பெறப்பட்டுள்ளதா என்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Loading More post
ட்விட்டரில் திடீரென டிரெண்டான விஜய்யின் 'பீஸ்ட்' கிளைமேக்ஸ் காட்சி - என்ன காரணம்?
ஐபிஎல் 'பிளே-ஆஃப்' ரேஸில் முந்தியது டெல்லி: பஞ்சாப் பரிதாப தோல்வி
சர்வதேச பத்திரிகை புகைப்படக் கலைஞர் விருது பெற்ற மதுரைக்காரர்: யார் அவர்? என்ன சாதனை?
நெல்லை கல்குவாரி விபத்து: பெரும் போராட்டத்துக்குப் பின் 4-வது நபர் சடலமாக மீட்பு
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?