கருத்துக்கணிப்பு முடிவுகள் தவறாகவே இருந்துள்ளன. அதனால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சிய மைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்க்கட்சிகள் நிராகரித்துள்ளன. குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகவே முடிந்துள்ளன என்று கூறியிருந்தார். இந்நிலையில் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனும் அதையே தெரிவித்துள்ளார்.
‘’கருத்துக் கணிப்பு முடிவுகள் இதற்கு முன் தவறாகவே அமைந்துள்ளன. 2004 ஆம் ஆண்டு பாஜக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்புத் தெரிவித்தது. ஆனால் என்ன நடந்தது? அதனால் 23 ஆம் தேதிவரை காத்திருப்போம். கேரளாவைப் பொறுத்தவரை நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி. அதில் சந்தேகம் இல்லை. சபரிமலை விவகாரம் தேர்தலில் பிரச்னை இல்லை. அதை யார் யார் பிரச்னை ஆக்கினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்’’ என்று அவர் தெரிவித்தார்.
Loading More post
‘பாரத் மாதா கி ஜே!’ - ‘கலைஞர் வாழ்க!’ - நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!
’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ - பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!
முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் - கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு
365 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ள காட்பாடி ரயில் நிலையம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர்
தமிழகத்தில் ரூ.31,400 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!