தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடும் சூழ்நிலையில் சேலத்தில் உள்ள ஐந்து ரோடு பகுதியில் அதிகப்படியான குடிநீர் வீணான சம்பவமும் நடந்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிதண்ணீருக்காக மக்கள் தெருத்தெருவாக குடங்களை தூக்கிக் கொண்டு அலைகின்றனர். தண்ணீர் லாரியும் பல இடங்களில் வராமல் இருப்பதால், மக்கள் தண்ணீருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தில் உள்ள ஐந்து ரோடு பகுதியில் அதிகப்படியான குடிநீர் வீணான சம்பவம் தமிழக மக்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. ஐந்து ரோடு பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக குடிநீர் குழாயிலிருந்த மொத்த குடிநீரும் வெளியேற்றப்பட்டது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள், பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில் குழாயிலிருந்த குடிநீரை முறையாக பயன்படுத்தியிருக்கலாம் என ஆதங்கம் தெரிவித்தனர். இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்டபோது, பராமரிப்பு பணிக்காக திறக்கப்பட்ட தண்ணீருக்கு மாற்று ஏற்பாடு செய்யமுடியாது என விளக்கமளித்துள்ளது.
Loading More post
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!