மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பாக, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுநாள் 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். இடைத்தேர்தல் மற்றும் மறுவாக்குப் பதிவுக்காக ஐயாயிரத்து 508 தேர்தல் பணியாளர்களும், ஆயிரத்து 364 நுண் பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
பாதுகாப்புப் பணியில் ஆயிரத்து 300 மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும், 15 ஆயிரத்து 939 காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது கமல் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியது தொடர்பாக அரசியல் கட்சியினர் புகார் அளித்துள்ள நிலையில், கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை மற்றும் வீடியோ ஆதாரங்களை கேட்டுள்ளதாக கூறிய சாஹு, தேனி நாடாளுமனற உறுப்பினர் என அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் பெயர் கல்வெட்டில் இடம் பெற்றிருந்த விவகாரம் தொடர்பாக யாராவது புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்