வெற்றுக் குரலை தாழ்த்துங்கள் ஸ்டாலின் குறித்து சீமான் பேச்சுக்கு முரசொலி பதிலடி

வெற்றுக் குரலை தாழ்த்துங்கள் ஸ்டாலின் குறித்து சீமான் பேச்சுக்கு முரசொலி பதிலடி
வெற்றுக் குரலை தாழ்த்துங்கள் ஸ்டாலின் குறித்து சீமான் பேச்சுக்கு முரசொலி பதிலடி

திமுக தலைவர் ஸ்டாலினின் திண்ணைப் பரப்புரை குறித்து விமர்சித்த நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, அவரது பெயரை குறிப்பிடாமல் முரசொலி தலையங்கத்தில் பதிலடி தரப்பட்டுள்ளது.

"நாம் தமிழர்" தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஸ்டாலின் முதல்வரானால் திண்ணைப் பிரசாரத்தின் போது, பிளாஸ்கிலே டீ எடுத்து வந்து குடிப்பார் என பேசியிருப்பதாக முரசொலி தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஸ்டாலின் முதல்வராவார் என சீமான் உண்மையை பேசியுள்ளதாகவும் தெரிவித்துள்ள முரசொலி, முதல்வரானாலும், ஸ்டாலின் மக்களோடு மக்களாக தேநீர் அருந்துவார் எனவும் கூறியுள்ளது. 

அம்பேத்கரின் கருத்துகளைத் திராவிடக் இயக்கம் வெளியிட்டதும், சில முக்கிய பிரச்னைகள் குறித்து அவருடன் விவாதித்ததும் சீமானுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை எனவும் முரசொலி தெரிவித்துள்ளது. அம்பேத்கர் புத்த மதத்துக்கு மாறிய நிகழ்வில் பெரியார் பங்கேற்றது எல்லாம் சீமானுக்கு தெரிந்திருக்க முடியாது எனவும் முரசொலி விமர்சித்துள்ளது. அயோத்திதாசரைக் குறித்தும், அம்பேத்கரை குறித்தும் பேசும் சீமானுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால், ஆ.ராசாவை சென்று பாருங்கள் என கூறியுள்ள முரசொலி, வெற்றுக் குரலைத் தாழ்த்துங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது. எந்தவொரு இடத்திலும் சீமானின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை முரசொலி தலையங்கத்தில் விமர்சனம் செய்து எழுதப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com