டெல்லியில் 21 ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
மத்தியில் பாஜக மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்க தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேர்தல் முடிவுக்கு பின் மூன்றாவது அணியால்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நம்பிக்கையிலும் அவர் உள்ளார்.
இதனையடுத்து, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசியுள்ளார். மூன்றாவது அணிக்கு சந்திரசேகர் ராவ் முயற்சித்து வரும் நிலையில், காங்கிரஸ் கூட்டணிகள் செய்ய வேண்டியவை என்னென்ன என்பது குறித்து இருவரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 21 ஆம் தேதி ராகுல் காந்தி தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், அந்தக் கூட்டத்தில் ராகுல்காந்தி முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தல் முடிவுக்கு பிறகான சூழலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading More post
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
``எந்த வகுப்புக்கு எப்போது பள்ளி திறப்பு?”- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
கோயம்பேடு சந்தை: பெட்ரோல், டீசல் விலை குறைவால் சரிந்தது தக்காளி விலை! இன்றைய நிலவரம் என்ன?
காஷ்மீரில் பட்டப்பகலில் போலீஸ் காவலர் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் அட்டூழியம்
மில்லரின் 'கில்லர்' பேட்டிங் - ராஜஸ்தானை வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!