இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹவாலா தரகரிடம் இருந்து ரூ.50 லட்சத்தை போலீசார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் மூலம் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனை டெல்லி போலீசார் கடந்த 25ம் தேதி கைது செய்தனர். தினகரனின் நண்பர் மல்லிகார்ஜுனாவும் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தினகரனையும், அவர் நண்பர் மல்லிகார்ஜுனாவையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். அதன் ஒரு பகுதியாக சென்னைக்கு அழைத்துவந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிந்து அவர்கள் நேற்று மாலை டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?