வேலூரில் தனியார் நிறுவன உரிமையாளர் கடத்தல் - பட்டபகலில் துணிகரம்

வேலூரில் தனியார் நிறுவன உரிமையாளர் கடத்தல் - பட்டபகலில் துணிகரம்
வேலூரில் தனியார் நிறுவன உரிமையாளர் கடத்தல் - பட்டபகலில் துணிகரம்

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் தனியார் நிறுவன உரிமையாளரை கடத்திவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள் நிறுவனத்திற்குள் புகுந்து தனியார் நிறுவன உரிமையாளர் நந்தகுமாரை வெளியே இழுத்து வருகின்றனர். பின்னர் அவரை வலுகட்டாயகமாக இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து கடத்திச்செல்கின்றனர். பட்டப்பகலில் நிகழ்ந்த இவை அனைத்தும் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில் நந்தகுமாரின் உறவினர்கள் வேலூர் வடக்கு காவல் நிலையம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் நந்தகுமாரை கடத்திச் சென்ற கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அவரை மீட்டுதரத் வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். முதல்கட்டமாக கடத்தல் தொடர்பாக நந்தகுமாரின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com